மின்சார எர்த் கம்பியை பிடித்து விளையாண்ட சிறுவனுக்கு அரங்கேறிய சோகம்.. மழை காலம் வருகிறது.. பெற்றோர்களே உஷார்.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் 17 வயதுடைய சிறுவன் மின் கம்பத்தை பிடித்து விளையாடுகையில், பரிதாபமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பச்சையம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ரித்தீஷ் (வயது 11). ரித்தீஷ் இன்று காலை அவரது வீட்டு அருகே இருக்கும் மின் கம்பியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். 

இந்த சமயத்தில், திடீரென மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும், மின்கம்பத்திற்கு அருகே இருக்கும் மரத்தினால், மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.  

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal child died electric shock attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->