#தமிழகம் || இன்று காலை அரங்கேறிய கொடூர விபத்து.! கல்லூரி மாணவிகள் உட்பட 9 பேர் படுகாயம்.!
namakkal ayipatti car bus accident
நாமக்கல் ராசிபுரம் அருகே அதிவேகமாக வந்த காரும், எதிர்திசையில் வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்துக்குள்ளானதில், ஐந்திற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி அருகே இந்த சாலை விபத்து அரங்கேறி உள்ளது. ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த, கர்நாடக பதிவு எண் கொண்ட கார், தனது முன்னால் சென்ற காரை முந்த முயன்ற போது, எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்தவர் கல்லூரி மாணவிகள் என 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் கார் பேருந்துக்கு அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் பேருந்தும் காரும் ஒன்றாக சாலையோரம் இருந்த வாய்க்காலில் சாய்ந்து விழுந்து கிடந்தது.
இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காரில் பயணம் செய்த ஐந்து பேரும், தனியார் பேருந்தில் 4 பேரும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
namakkal ayipatti car bus accident