நாமக்கல் ஏ.டி.எம் கொள்ளை முயற்சி விவகாரத்தில், வடமாநில கொள்ளை கும்பலின் பகீர் வாக்குமூலம்.!!
Namakkal ATM Burned case police arrest culprits
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் தனியார் கல்வி நிறுவனத்தின் நுழைவாயிலில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் இயந்திரம் கடந்த 5 ஆம் தேதி அதிகாலையில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது.
மேலும், மர்ம நபர்கள் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி ஏ.டி.எம் இயந்திரத்தை பிளக்க முயற்சி செய்ததும், இதனால் ஏற்பட்ட தீயில் ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் தீயில் கருகியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த சமயத்தில், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாய்ச்சல் பிரிவு அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில், சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற வெளிமாநில லாரியை நிறுத்தி விசாரிக்க முற்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தியதும், லாரியில் இருந்த நான்கு பேர் தப்பி ஓடவே, காவல்துறையினர் சுதாரித்து 3 பேரை மடக்கிப் பிடித்த நிலையில், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், மேற்கூறிய நாமக்கல் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதும், இவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஷைகுல், முகமது சராபாத், முகமது ஜனீத் என்பதும் தெரியவந்துள்ளது. சரக்கு ஏற்றி செல்ல வந்து செல்லும் நேரங்களில், வழியில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத ஏ.டி.எம்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal ATM Burned case police arrest culprits