சாதி மாறி காதல் கல்யாணம்., காதல் மனைவியை வெட்டி துண்டாக்கிய கணவன் தப்பியோட்டம்.!
namakal husband kill wife
காதலித்து திருமணம் செய்த மனைவியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள நவனிராசிபுரம் கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் நந்தினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இவர்களுடைய திருமணம், சாதி மறுப்பு திருமணம் ஆகும். தற்போது இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் மகன் உள்ளார்.
இந்த நிலையில், அண்மைக்காலமாக கணவன் -மனைவி இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இன்றும் இருவருக்கும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் மரம் வெட்டும் தொழிலாளியான தமிழ்ச்செல்வன், தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த நந்தினியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள தமிழ்ச்செல்வனை தேடி வருகின்றனர்.
English Summary
namakal husband kill wife