நாகை: நாடக காதலில் வீழ்ந்த மகள், நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி மகளை மீட்ட பெற்றோருக்கு காத்து இருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் அருகே இளம்பெண்ணை நாடக காதலில் விழ்த்தி, அரங்கேற இருந்த நாடக திருமணத்தை பெண்ணின் பெற்றோர்கள் தடுத்து நிறுத்தி, மீட்டு செல்லும் போது, போலீசார் பெற்றோர்களிடம் இருந்து மகளை பிரித்து அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

நாகை மாவட்டம், செம்பியன் மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவன் மதன் ராஜ். இவன் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி உள்ளான். இவன் அதே நிறுவனத்தில் கீரனூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் பாரதி என்பவரை நாடக காதல் வலையில் விழுத்தி உள்ளான்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரதி வீட்டை விட்டு வெளியேறி, நாடக காதலனை தேடி சென்றுள்ளார். மகளை காணாத பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். மேலும், பெற்றோர்கள் விசாரணை செய்ததில், மதன்ராஜ் என்பவருடன் பாரதி பழகி வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து பெற்றோர்கள் இன்று நாகையில் மதன்ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மதன்ராஜ் அங்கு இல்லை. திருமணம் செய்வதற்காக சார்பு அலுவலகத்துக்கு பாரதியை அழைத்துக் கொண்டு சென்று உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பாரதியின் பெற்றோர்கள், பாரதிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, அவரை அங்கிருந்து மீட்டு காரில் அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது பாரதி பெற்றோருடன் செல்ல மறுத்தார். 

அந்நேரம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெற்றோர்களிடமிருந்து பாரதியை பிரித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nakai drama love marriage issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->