மக்களை கவரும் வகையில் மூவண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நாகூர் தர்கா .!
nagore dharga independence day
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்காக மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து , வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடிகளை பறக்கவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அந்த அறிவுறுத்தலின் படி ,உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நிலையில் . நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினோரா மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.
இதுமட்டுமின்றி நாகை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகமும் கண்ணை கவரும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதி நேற்று முதல் 3 நாட்கள் வரை வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
English Summary
nagore dharga independence day