நாகர்கோவில்: ஒருதலை காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை..!  - Seithipunal
Seithipunal


ஒருதலைக்காதல் தோல்வியடைந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

நாகர்கோவில் அடுத்த ராஜமங்கலம் அருகே உள்ள கோவில் புரத்தை சேர்ந்தவர் அசோக் குமார், இவருக்கு வயது 30. இவர் தினக்கூலியாக வேலை செய்துவருகிறார். இவர் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்துவந்துள்ளார். 

இந்நிலையில், அந்த பெண் அசோக்குமாரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்துள்ளார் அசோக்குமார். சம்பவத்தன்று யாரும் வீட்டில் இல்லாத நிலையில் ஒருதலைகாதல் தோல்வியடைந்த விரக்தியில் விஷம் அருந்தியுள்ளார்.

வீட்டிற்கு வந்த அசோக்குமாரின் சகோதரர் அவர் வாயில் நுரை தள்ளி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒருதலைக்காதல் தோல்வியடைந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagarcoil Man Suicide due to One Side Love Failure


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->