20 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை மிரட்டி சீரழித்த காமுகன்.. நாகையில் அதிர்ச்சி சம்பவம்.!
Nagapattinam Thirukkuvalai Man Sexual Abused 20 More Girls
திருக்குவளையில் 15 க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமுகன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பகுதியை சார்ந்தவன் ஜீவா. இவன் சொந்த ஊரில் வசித்து வந்த பல்வேறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கிராமத்தில் உள்ள பெண்கள் ஆற்றில் குளிக்க செல்கையில், அவர்களை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு ஆபாச இணையதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இவ்வாறாக காமுகனின் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து, 20 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் இருந்து அவ்வப்போது பணம் கேட்டும் மிரட்டி பறித்து வந்துள்ளான்.
பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே தெரிவிக்காமல் இருந்த நிலையில், ஒவ்வொருவராக பேச முன்வந்த போது மொத்தமாக 20 க்கும் மேற்பட்ட பெண்களிடம் காமுகன் ஜீவா அத்துமீறியது உறுதியானது. இதனால் ஊர் பொதுமக்கள் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காமுகன் ஜீவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Nagapattinam Thirukkuvalai Man Sexual Abused 20 More Girls