குடும்ப தகராறில் சித்தப்பாவை கொடூர கொலை செய்த அண்ணன் மகன்.. செம்பனார்கோவிலில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் நாச்சிக்கட்டளை கிராமத்தை சார்ந்தவர் ராஜாக்கண்ணு (வயது 57). இவர் அங்குள்ள ஆக்கூரில் மின்வாரிய அலுவலத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். 

இவருக்கும், இவரது அண்ணன் மகன் சண்முகம் (வயது 37) எனபவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை இவர்களுக்குள் வழக்கம்போல வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், அருகில் இருந்த மூங்கில் கம்பை எடுத்து ராஜாக்கண்ணுவின் தலையில் அடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்தியிலேயே இரத்த வெள்ளத்தில் அலறித்துடித்துள்ளார். 

இவரைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், ராஜாக்கண்ணுவை மீட்டு அங்குள்ள மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் ஆனந்த பத்மநாபன் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, ராஜாக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam Sembanarkoil Murder case police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->