வகுப்பறையில் வைத்து சிறுமிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி.!
Nagapattinam Seerkazhi child sexual torture by teacher case Court Judgement
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி கொண்டல் காலனி தெரு பகுதியை சார்ந்தவர் மூவேந்தன் (வயது 28). இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2014 ஆம் வருடத்தின் ஜனவரி மாதம் 24 ஆம் தேதியன்று வகுப்பறையி இருந்த 3 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மற்றும் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமிகள் பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவேந்தனை கைது செய்தனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை, நாகை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த விசாரணை நேற்று நீதிபதி தமிழரசி முன்னிலையில் விசாரணைக்கு வரவே, குற்றம் சுமத்தப்பட்ட மூவேந்தனிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டார். மேலும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவித்தாக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Nagapattinam Seerkazhi child sexual torture by teacher case Court Judgement