சமாதானம் செய்வது போல கபட நாடகம்?.. மனைவியை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்ட கொடூரன்.!!
Nagapattinam Porayar girl murder by husband police investigation
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொறையாறு நல்லதண்ணீர் தெரு பகுதியை சார்ந்தவர் வேல்முருகன் (வயது 39). இவர் தரங்கம்பாடியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (வயது 28). இவர்கள் இருவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த தம்பதிகளுக்கு சரண் என்ற 5 வயதுடைய குழந்தையும், கமலேஸ்வரன் என்ற 3 வயதுடைய குழந்தை என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேல்முருகனிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வேல்முருகன் அவரது மனைவியை தினமும் அடித்து கொடுமைப்படுத்திவந்த நிலையில், இந்த விஷயம் குறித்து காயத்ரி, அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கணவன் - மனைவி தகராறு அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த சண்டையில் காயத்ரி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசலில் இருக்கும் பெற்றோர்களின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குடவாசலில் இருக்கும் மாமனாரின் இல்லத்திற்கு சென்ற வேல்முருகன், மனைவியை சமாதானம் செய்து மீண்டும் பொறையரில் உள்ள இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காயத்ரி வீட்டில் உள்ள மின்விசிறியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், காயத்ரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், காயத்ரியை தற்கொலைக்கு தூண்டியதாக வேல்முருகனை கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Nagapattinam Porayar girl murder by husband police investigation