கள்ள உறவுக்கு தடையாக இருந்த ஹவுஸ் ஓனர் கொலை.. குடியிருக்க வந்த பெண்ணால், அரங்கேறிய விபரீதம்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் பகுதியை சார்ந்தவர் தலைமையாசிரியர் ஆனந்த ஜோதி. இவரது மனைவி சித்ரா (வயது 49). இவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டின் முன்னர் கோலமிடுகையில், மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

இதில், சித்ராவின் வீட்டு மாடியில் குடியிருந்த பிருந்தா என்ற பெண்மணியையும், அவரின் இல்லத்திற்கு வந்து செல்லும் சையது ரியாசுதீன் என்ற நபரையும் அழைத்து விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில், ரியாசுதீன் சீதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 

இது தொடர்பான வாக்குமூலத்தில், சேத்தூர் கிராமத்தை சார்ந்த குணசேகரன் என்பவரின் மகள் பிருந்தா. இவர் கணினி பயிற்சி மேற்கொண்டு இருந்த சமயத்தில், ரியாசுதீனின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2016 ஆம் வருடத்தில் பிருந்தாவுக்கும், அரியலூரை சார்ந்த செல்வகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ள நிலையில், பிருந்தாவின் தந்தை குணசேகரனும், ரியாசுதீனும் கட்டுமான தொழிலை ஒன்றாக செய்து வந்துள்ளனர்.

திருமணம் முடிந்த ஐந்து மாதத்திலேயே செல்வகுமார் சிங்கப்பூருக்கு பணிக்காக சென்றுவிட்ட நிலையில், பிருந்தா சித்ராவின் வீட்டு மாடியில் குடிவந்துள்ளார். இந்நிலையில், பிருந்தாவிற்கும் - சையது ரியாசுதீனிற்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட பழக்கத்தால், பிருந்தாவை காண அடிக்கடி ரியாசுதீன் வந்து சென்றுள்ளான். இதனைகண்டுகொண்ட சித்ரா, ரியாசுதீனை பல முறை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ரியாசுதீன், பிருந்தாவை காணவும், வீட்டிற்குள் வர இயலாமலும் தடை விதித்த சித்ராவை, இரண்டு முறை கொலை முயற்சி செய்து, கடந்த 18 ஆம் தேதி கொலை அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றவாளியாக இருந்த ரியாசுதீன் மற்றும் பிருந்தாவை சீர்காழி காவல் துறையினர் கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam Mayiladuthurai women murder due to disturb of illegal affair meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->