கடனை கேட்க சென்றவர் அடித்துக்கொலை.. கடன் வாங்கியவன் வெறிச்செயல்..!!
Nagapattinam Man Murder due to Loan Issue Police Investigation 23 May 2021
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி வடவூர் தென்பாதி கிராமத்தை சார்ந்தவர் குமார் (வயது 35). இவர் கொத்தனாராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக அப்பகுதியை சார்ந்த பக்கிரிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மூத்த மகன் திருமணத்திற்கு குமாரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர்.
இந்த ரூ.10 ஆயிரம் கடனில் ரூ.7,300 ஐ திரும்பி கொடுத்திவிட்ட நிலையில், மீதமுள்ள தொகையை குமார் கடந்த 13 ஆம் தேதி வாங்க முடிவு செய்து பக்கிரி சாமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது, வீட்டில் இருந்தவர்கள் பணம் இல்லையென்று கூறிய நிலையில், மீதி பணத்தை சில நாட்கள் கழித்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று குமார் தனது இருசக்கர வாகனத்தில் கடைத்தெருவுக்கு சென்று வந்த சமயத்தில், அவரை இடைமறித்த பக்கிரிசாமியின் இளைய மகன் சுந்தரபாண்டியன் (வயது 24), எப்படி நீ? வீட்டுக்கு வந்து கடனை கேட்பாய் என வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும், கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து குமாரின் தலையில் அடிக்கவே, படுகாயமடைந்த குமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமணியல் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் சுந்தரபாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Nagapattinam Man Murder due to Loan Issue Police Investigation 23 May 2021