திருமணம் முடிந்த 6 மாதத்தில், தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட பெண்மணி.. கைதான கணவன்.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் நல்லூர் மெயின் ரோடு பகுதியை சார்ந்தவர் ராஜேஷ் (வயது 30). இவர் தேநீர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், ஆயங்குடி பள்ளம் கிராமத்தை சார்ந்த ரஞ்சிதா (வயது 25) என்ற பெண்மணிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த நிலையில், நேற்று முன்தினத்தின் போது இரவு நேரத்தில் ரஞ்சிதா வீட்டிற்குள் தூக்கில் தொங்கியவாறு பிணமாக மீட்கப்பட்டார். மேலும், இவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி ரஞ்சிதாவின் உறவினர்கள் பிரச்சனை செய்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக ரஞ்சிதாவின் அண்ணன் வீரமணி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், ரஞ்சிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam Kollidam new married girl mystery Murder police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->