நாகப்பட்டினம்: சுற்றுலா பயணிகளின் உடமைகளை திருடிய ஊர்க்காவல்படை அதிகாரி..!
Nagapattinam Home Guard Officer Aravind Stolen Tourist Money Police Investigation Video on Social Media
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்தவர்கள், தங்களின் காரில் பணப்பை உட்பட சில உடமைகளை வைத்துவிட்டு கடலில் குளிப்பதற்கு சென்றுள்ளனர். இதன்போது, அங்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பனங்குடி பகுதியை சார்ந்த ஊர்காவல்படை வீரர் அரவிந்த் வந்துள்ளார்.
கடற்கரை பகுதிக்கு வந்த அரவிந்த், காரில் இருந்த பணம் உள்ளிட்ட உடமையை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். இதனைக்கண்ட இளைஞர்கள் அவரை இடைமறித்து வாக்குவாதம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, இதனைக்கண்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Nagapattinam Home Guard Officer Aravind Stolen Tourist Money Police Investigation Video on Social Media