17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய காமுக காதலன்.. நாகையில் அதிர்ச்சி சம்பவம்.!!
Nagapattinam girl sexual torture by drama love boy
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்துள்ள அலங்கன் கிராமத்தை சார்ந்தவன் கேசவன். இவர் கம்பி பிட்டராக பணியாற்றி வருகிறான். இந்த நிலையில், கேசவன் அப்பகுதியை சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவியை காதல் வலையில் விழவைத்துள்ளான்.
இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, படிக்கும் வயதில் காதல் வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
காதலனின் காதல் வார்த்தைகளில் மயங்கியிருந்த சிறுமி, விஷயத்தை கேசவனிடம் தெரிவிக்கவே, 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி இருந்து அழைத்து சென்றுள்ளான். சிறுமி மாயமானதை அடுத்து, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி மற்றும் கேசவன் இக்கிராமத்தில் உள்ள கேசவனின் உறவினரின் இல்லத்தில் பதுங்கியிருந்து தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை மீட்டு விசாரணை செய்த சமயத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கேசவனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Nagapattinam girl sexual torture by drama love boy