காதலனுடன் எஸ் ஆன மணப்பெண்.. கண்ணீரில் பெற்றோர்கள்.. கொள்ளிடத்தில் பரபரப்பு.!!
Nagapattinam girl escaped with her Love boy
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆச்சாள்புரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்மணி ஒருவருக்கும், செம்பனார்கோவில் காளஹஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தை நடத்திவரும் வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
திருமண ஏற்பாடுகள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு, இருவரின் வீட்டாரும் கடந்த சில மாதங்களாக திருமணத்திற்காக மும்மரமாக இருந்து வந்துள்ளனர். நேற்று காலை இவர்களது திருமணம் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்துள்ளது.
இதற்காக பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் மாலையே மண்டபத்திற்கு வந்துள்ளனர். இதனால் திருமண மண்டபமே களைகட்டியிருந்தது. நேற்று முன்தினம் மாலை பெண் அழைப்பு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. அலங்காரம் செய்யும் பணி ஒருபுறம், சமையல் பணிகள் மற்றொருபுறம் என திருமண மண்டபம் பரபரப்பாக இருந்தது.
இந்நிலையில், திடீரென மணப்பெண் மாயமாகியுள்ளார். அவரை மண்டபம் முழுவதும் தேடிய நிலையில், அவர் காணவில்லை. இதனால் திருமண மண்டபத்திற்குள் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மணப் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதலனுடன் மணப்பெண் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனால் திருமணம் நின்றது.
இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மணப்பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்ற காரணத்தால் மணப்பெண் தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Nagapattinam girl escaped with her Love boy