சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து.. என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே, 5 மாத கர்ப்பிணியான சோகம்.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் தெற்கு வெளிப்பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை, தாய் திருமருகல் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றனர். இதனால் இவர்கள் பணிக்கு செல்கையில், இதே பகுதியை சார்ந்த இந்திரா என்பவரின் முதியவரின் இல்லத்தில், இவர்களின் மகளை பாதுகாப்பாக விட்டுவிட்டு சென்றுள்ளார். 

இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி சிறுமி வாந்தி எடுத்து மயங்கிய நிலையில், சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரணை செய்துள்ளனர். 

இந்த விசாரணையில், இதே பகுதியில் உள்ள ஜீவா நகர் பகுதியை சார்ந்த ராஜேஷ் (வயது 29) என்பவர், இந்திராவின் வீட்டிற்கு வந்து செல்லும் நிலையில், சிறுமிக்கு அடிக்கடி குளிர்பானம் வாங்கி கொண்டு பழக்க படுத்தியுள்ளார். பின்னாளில் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து, பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் தாயார் வழங்கிய புகாரின் பேரில், காவல் துறையினர் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam child girl 17 year old sexual abuse by culprit


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->