எழவு வீட்டில் எழவெடுத்தவர்கள் செய்த வேலையால் தீக்கரையான வீடுகள்.!
Nagapattinam 20 Houses Burned in Fireworks at Funeral Function House 9 April 2021
காட்டுநாயக்கன் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
நாகப்பட்டினம் நகர் பகுதியில் உள்ள காட்டுநாயக்கன் பகுதியை சார்ந்த தையல் நாயகி என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி இருக்கின்றனர்.
இதன்போது வெடித்த பட்டாசு அங்குள்ள கூரையின் மீது பட்டு திடீரென வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால், தீ கட்டுக்கடங்காத அளவு பரவ தொடங்கியதால், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளது என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Nagapattinam 20 Houses Burned in Fireworks at Funeral Function House 9 April 2021