நாகப்பட்டினத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி! அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!
nagapatinam person attack by corona virus
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் ஆனது தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.
அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ள நிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் சளியின் தாக்கம் இருந்தால் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று உள்ளார்.
அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அந்த நபர், திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
nagapatinam person attack by corona virus