ஜெயங்கொண்டம் அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! ரஞ்சித் உள்ளிட்ட 4 கொடூரன்களை கைது செய்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


ஜெயங்கொண்டம் அருகே ஆடு மேய்க்க சென்ற 13 வயது சிறுமியை, 4 பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரத்தை செய்த 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவன் ரஞ்சித். இவன்  அதே கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை கடத்தி சென்று கற்பழித்துள்ளான்.

மேலும், அந்த சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த மூன்றுபேர் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்கவே, இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரஞ்சித் மற்றும் அந்த மூன்று நபர் மீது புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NAGAMANGALAM child abuse


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->