ஊரடங்கை மீறி பிரியாணி சமைத்து பர்த் டே செலிபரேஷன்... புள்ளிங்கோவை தூக்கிய காவல்துறை.!!
Nagai Birthday celebration against curfew pullingo arrest by police
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மேலப்பாதி பகுதியை சார்ந்தவர் பரத். இவருக்கு சம்பவத்தன்று பிறந்தநாள் தினம் வந்துள்ளது. தற்போது ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளார்.
மேலும், நண்பனின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்த பரத்தின் நண்பர்கள் 8 பேர், அங்குள்ள வயல்வெளிப்பகுதிக்கு சென்று பிரியாணி சமைத்துள்ளனர். பின்னர் அனைவரும் பிரியாணியை சாப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் கேக் வெட்டி பிறந்தநாளை சிறப்பித்த நிலையில், இந்த புகைப்படத்தை வாட்சப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இது குறித்த பதிவு வைரலானதை அடுத்து, காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.
இந்த விசாரணையில், பிரியாணி சமைத்து சாப்பிட்டு பிறந்தநாள் கொண்டாடிய அனைவரையும் கைது செய்த காவல் துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Nagai Birthday celebration against curfew pullingo arrest by police