அண்ணனின் செயலால் ஆங்கிரி பேட்களாக மாறிய அன்பு தம்பிகள்.. கட்சி படிவத்தை ரிவரில் த்ரோவ் பண்ணிய சோகம்.! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் நாம் தமிழர் கட்சியில் 700 பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி, கும்பகோணம் ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா தலைமையிலான நிர்வாகிகள் என 700 க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். 

பூத் கமிட்டி கட்டமைப்பு படிவத்தையும் அங்குள்ள ஆற்றில் வீசி எறிந்து தங்களின் வெளிப்பாடுகளை ஏற்படுத்தினார். மேலும், தங்களின் அட்டையில் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் படம் இடம்பெற்று இருந்ததால், அந்த அட்டையை மட்டும் கீழே போட மனமில்லாது, கட்சியின் தலைமையும் ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

எந்தவிதமான விளக்கமும் கேட்காமல் கட்சியில் உள்ள அனைவரையும் புறக்கணிப்பதாக குற்றசாட்டை முன்வைத்த அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டு தேர்தல் வேட்பாளராக பிற மாநிலத்தவர்கள் மற்றும் பிற மொழி பேசுபவர்களை நிறுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naam Tamilar Katchi Kumbakkonam Member angry with Seeman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->