கோவை  கார் குண்டுவெடிப்பு எதிரொலி | நாகையில் அசன் அலி, ஹாரிஸ் முகமது இருவர் வீட்டில் சோதனை! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் பகுதி அசன் அலி, மஞ்சக்கொல்லை பகுதி ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 

கடந்த 23 ஆம் தேதி கோவை இந்து கோவில் எதிரே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து சந்தேகத்திற்கு உரிய நபர்கள், சில இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தேசிய புலனாய்வு முகமையில் (NIA) வழக்கு நிலுவையில் உள்ள நாகை சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது வீடுகளில் இன்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் இருவரது வீடுகளிலும் சுமார் ஒருமணிநேரம் சோதனை செய்தனர். மேலும், இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naagai Sikkal Manjakollai police search


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->