#JustIN: மைசூர் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்கார விவகாரம்.. ஈரோட்டை சார்ந்த கூலித்தொழிலாளி கைது.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் சாமுண்டிமலை அடிவாரத்தில் லலிதா திரிபுரா பகுதியில், கடந்த 24 ஆம் தேதி கல்லூரி மாணவி காதலருடன் பேசிக்கொண்டு இருந்தார். இதன்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பலால் மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். காதலர் பயங்கரமாக தாக்கப்பட்டார். இந்த கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்கார விவகாரம் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில், சாமுண்டி மலை அடிவாரத்தில் மதுபானம் வாங்கி அருந்திய மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அந்த கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், மைசூரில் செயல்பட்டு வரும் தனியார் எஞ்சினியரிங் கல்லூரியினை சார்ந்த 4 மாணவர்கள் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகளால் சந்தேகிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த 4 மாணவர்கள் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற தினத்தில் 4 பேரும் மாயமாகி இருந்தனர். மேலும், சம்பவத்தின் மறுநாள் கல்லூரியில் நடைபெற்ற தேர்விலும் அவர்கள் பங்கேற்கவில்லை. மாயமானத்தில் ஒருவர் தமிழகத்தை சார்ந்த மாணவர் என்றும், மற்ற 3 பேர் கேரளாவை சார்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. பாலியல் பலாத்கார குற்றம் நடைபெற்ற மறுநாளில் தேர்வு இருந்தும் அவர்கள் கூட்டாக வரவில்லை. குறித்த மாணவர்களின் விபரத்தை காவல் துறையினர் சேகரித்துள்ள நிலையில், அவர்களை கண்டறிய கேரளாவுக்கும் - தமிழகத்திற்கும் தனிப்படை விரைந்துள்ளது. பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் காதலர் அளித்த வாக்குமூலத்தில், " கடந்த 24 ஆம் தேதி நாங்கள் இருவரும் சாமுண்டி மலை அடிவாரத்திற்கு சென்றோம். அங்கு பாறை அருகே அமர்ந்து பேசினோம். அதன்போது, அங்கு வந்த 6 பேர் எங்களை சுற்றிவளைத்து கிண்டல் செய்தார்கள். இதனைதட்டிக்கேட்ட என்னை கற்களால் தாக்கினார்கள். 

இதனால் நான் சுயநினைவை இழந்து மயங்கினேன். மயக்கம் தெளிந்ததும் பார்த்தபோது காதலி இல்லை. 4 பேர் என்னைச்சுற்றி இருந்தார்கள். அவர்களிடம் காதலியை கேட்கையில், ரூ.4 இலட்சம் வீட்டில் இருந்து வாங்கி தர வேண்டும் என்று கூறினார்கள். அவர்களிடம் காதலியை காண்பிக்க கூறவே, அவர்கள் காதலியை என் முன் கொண்டு வந்தனர். அவரது உடலில் நகக்கீறல் இருந்தது, அவர் அழுதுகொண்டு இருந்தார். நிலைமையை உணர்ந்துகொண்டேன். இதற்குள் அவ்வழியாக பொதுமக்களில் சிலர் வந்ததால், எங்களை மர்ம நபர்கள் விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதன்பின்னர், பொதுமக்களின் உதவியுடன் நாங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்தோம் " என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து தற்போது வரை மீளவில்லை என்பதால், அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற முடியவில்லை. 

இந்நிலையில், கல்லூரி மாணவியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கர்நாடக காவல் துறையினரின் ஒரு தனிப்படை இன்று காலை தமிழகம் விரைத்திருந்தது. சம்பவம் நடைபெற்ற தினத்தில் அங்கு பதிவான அலைபேசி எண்கள் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் தாளவாடி பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி பூபதி என்பவனை கர்நாடக மாநில காவல் துறையினர் தமிழக காவல் துறையினர் உதவியுடன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysore College Girl Gang Abused Case Erode Sathyamangalam Coli Worker Boopathy Arrested by KA Police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->