மயிலாடுதுறையில் போராட்டத்தில் குதித்த இஸ்லாமியர்கள்!
Muslims protest against CAA
தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இச்சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு மற்றும் ஆதரவளித்த அதிமுக அரசை கண்டித்தும், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய கட்சியினர், ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் திமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்திப் பேசி, கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மயிலாடுதுறை அருகே நீடுரில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடையடைப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட்டி: ஹாஜாகனி (பொதுச்செயலாளர், தமமுக)
செய்தியாளர் : மணி
English Summary
Muslims protest against CAA