அதிமுக பாணியில் களத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள்.! மதுரை அருகே நெகிழ்ச்சி.!!
muslims pray for rain
கடந்த ஆண்டு தமிழ்நாட்டை பருவமழை கைவிட்டது. இந்த ஆண்டும் போதுமான அளவு மழை பெய்யுமா? என்ற ஏக்கம் மக்கள் மனதில் எக்கச்சக்கமாக குடிகொண்டுள்ள நிலையில், இரவு பகலாக மக்கள் நீருக்காக அலைந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடத்த இருப்பதாக அறிவித்தனர். பின்னர், அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், சார்பில் பல கோவில்களில் சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதே போலவே தமிழகத்தில் வாழும் பிற மதத்தவரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மதுரை மாவட்டம் அன்னவாசல் அருகே நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் மழை வேண்டி நோன்பிருந்து சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்து வந்தனர்.