இரவு முழுவதும் வீட்டிற்கு வராத மகன்.! விடியற்காலையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில், பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கு அருகே ஒரு இளைஞரின் பிணம் கிடப்பதாக காவல்துறையினருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பிணம் குறித்த விசாரணை நடைபெற்றுவருகின்றது. 

இதுகுறித்து காவல்துறையினர், " வாஞ்சூர் பகுதியை சேர்ந்த பகுருதீன் 19 வயது மகன் அசாருதீன் என்பவர் தான் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவர். தினமும் நண்பர்களுடன் அவர் விளையாடச் செல்வது வழக்கம். 

அன்றும் அதுபோல தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடச் சென்றுள்ளார். ஆனால், அசாருதீன் வீட்டிற்கு திரும்பவில்லை. நண்பர்களுடன் தங்கி இருக்க கூடும் என பெற்றோர்களும் நினைத்து இருந்துவிட்டனர். 

இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து அவரின் நண்பர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslim Boy murderded in nagai 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->