முன் விரோதத்தால் இளைஞர் கொலை..!! திருநெல்வேலியில் பரபரப்பு...!! - Seithipunal
Seithipunal


முன் விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரை கடந்த 5 தேதி முதல் காணாததால் அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அவருக்கும் தூத்துகுடியை சேர்ந்த துரைமுருகன் என்பவருக்கும் கோவில் திருவிழாஅவின் போது தகராறூ ஏற்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து துரைமுருகனின் கூட்டாளியான ஜோயாஸ் என்பவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கடந்த 5 தேதி சமரசம் பேசுவதாக கூறி ஜெகதீச்ஷை துரைமுருகன் மற்றும் கூட்டாளிகள் காரில் அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து அங்கு நடந்த வாக்குவாதத்தில்  ஜெகதீஷனை கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர்,  யாருக்கும் தெரியாமல் இருக்க அங்குயே அவரை புதைத்துள்ளனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து ஜோயஸ் கூறிய இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு புதைக்கப்படிருந்த ஜெகதீஷனின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் துரைமுருகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder of a youth in animosity


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->