நெல்லையில் இளைஞரின் துண்டிக்கப்பட்ட தலை...!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


இளைஞரின் தலை துண்டித்து வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி, படப்பையை அடுத்த எருமையூர் பகுதியில் நேற்றிரவு இளைஞர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு ஒரு வீட்டு வாசலில் கிடந்துள்ளது. காலையில் அதனை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியைடைந்தார்.

அங்கு வந்த அக்கம்பக்கத்தினரும் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த தலையை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்துவராஜா என்பவரது தலை அது என்பது கண்டறிப்பட்டுள்ளது.

அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் ஏதேனும் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder Near Thirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->