மது போதையில் மச்சானை கொலை செய்த அக்காள் கணவன்.. கரூரில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


குடும்ப பிரச்சனையால் மைத்துனனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கம்மநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜய் . இவர் அந்த பகுதியில் கொத்தனராக வேலை செய்து வருகிறார். இவரின் சகோதரி கணவரர் சிவசூரியனுடன் விஜயின் வீட்டின் அருகே வசித்து வருகிறார்.

விஜய்க்கும் சிவசூரியனுக்கும் இடையில் முன்விரோதம் இருந்துள்ளது.  இந்நிலையில், இருவரும் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு குடும்பதகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே விஜயை கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சிவசூரியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder Near Karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->