நேற்றைய தேர்தலின் கொடூரமாக வெட்டப்பட்ட மூவர்.. பறிபோன உயிர்.!
murder in yesterday election
தூத்துக்குடி அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அரிவாளால் வெட்டப்பட்ட மூன்று பேருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகம் முழுவதும் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அந்த பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரான மாசானசாமி என்பவரின் மனைவி லதா ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இளையராஜா என்பவர் கை உருளை சின்னத்தில் போட்டியிட்டார்.
இந்த இரு தரப்பினருக்கிடையே வேட்பு மனு பரிசீலனையின் போது முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது, நேற்று நடந்த வாக்குப்பதிவின் போது மேட்டூர் வாக்குச்சாவடியில் இளையராஜாவின் ஆதரவாளர்கள் சிலர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாசானசாமி, இளையராஜா தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் நடைபெற்று அது கைகலப்பில் முடிந்ததது.
இந்த கைகலப்பில் இரு தரப்பினரும் கடுமையாக தாக்கி கொண்ட சமயத்தில் வாக்குச்சாவடிக்கு அருகே நின்றுக் கொண்டிருந்த மாசானசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான ஜேசு மற்றும் ராமசாமி ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். இதில் வெட்டுக் காயம் அடைந்த மூவரும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே இளையராஜாவின் ஆதரவாளரான மாரியப்பன் என்பவரை தூத்துக்குடி வடக்கு பரம்பு பகுதியில் சுற்றி வளைத்த சிலர் நபர்கள் அவரை கல்லால் முகம் தலை உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக தாக்கிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாசானசாமி, இளையராஜா இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த மோதலால் அந்த பகுதியே போர்களமாக காணப்பட்டது. இதையடுத்து ஒட்டப்பிடாரம் பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
murder in yesterday election