மதுபோதை.. நண்பன் தானே என மனைவியை தனியே விட்டு சென்ற கணவன்.! இறுதியில் விபரீதம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் மறுகால்குறிச்சி என்ற பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் வான்மதி என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். வான்மதி பணக்கார வீட்டு பெண் என்பதால் அவருடைய வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் காரணமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருநெல்வேலி டவுனில் வீடு வாடகைக்கு எடுத்து நம்பிராஜனின் தந்தையோடு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நம்பிராஜனை பார்க்க முத்து பாண்டி என்பவர் வந்துள்ளா. நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய நண்பனை பார்த்த சந்தோஷத்தில் மது அருந்தி விட்டு பின்னர் இருவரும் வெளியே சென்றுள்ளனர்.

Image result for train seithipunal

ஆனால், வெளியே சென்ற நம்பிராஜன் வீடு திரும்பாத காரணத்தால் கலக்கமடைந்த வான்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணையில் நம்பிராஜனின் தலையானது அந்த பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் முத்துப்பாண்டியை பிடித்து விசாரணை நடத்தியதில் அவரும் வான்மதியின் அண்ணன் செல்லச்சாமியும் சேர்ந்து திட்டமிட்டு, நம்பிராஜன் வெட்டி கொலை செய்து தலையை தூக்கி தண்டவாளத்தில் போட்டதாக தெரியவந்துள்ளது. செல்லப்பாண்டியிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய நண்பர்கள் அவருடைய தங்கை திருமணம் குறித்து கேலி செய்ததால் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக தெரிவித்திருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in thirunelveli train track


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->