நாளை கல்யாணம், இன்று கருமாதி.! நள்ளிரவில் கழுத்தறுக்கப்பட்ட புதுமாப்பிள்ளை.!
murder in thenkasi sangarankovil
தென்காசி மாவட்டத்தில் இருக்கும் சங்கரன்கோவில் அருகே நாளை திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தென்மலை இந்திரா காலனியை சேர்ந்த ஜேசிபி ஆப்பரேட்டர் முனியப்பனுக்கு நாளை காலை திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இதன் காரணமாக அவரின் வீட்டுக்கு முன் பந்தல் அலங்காரம் செய்தும் உறவினர்கள் கூடியும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் புது மாப்பிள்ளையான முனியப்பன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் முனியப்பனின் தங்கை கணவரான வீர சங்கிலி முருகன் என்பவருக்கும், புது மாப்பிள்ளை முனியப்பனுக்கும் இடையே திருமணத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முனியப்பன் வீர சங்கிலி முருகனை அடித்து இருக்கின்றார். இதில் ஆத்திரமடைந்த வீர சங்கிலிமுருகன் மதுபோதையில் அனைவரும் தூங்கிய பின்னர் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த புது மாப்பிள்ளையை கழுத்தில் கத்தியை வைத்து குத்தி கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வீர சங்கிலிமுருகனை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
murder in thenkasi sangarankovil