10 பேர் கொண்ட கும்பல்.. ஓடும் பேருந்தில் அலறி, துடிக்க.. செய்த அரங்கேற்றிய கொடூரம்.!
murder in seyyaru
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே காஞ்சிபுரம் சாலையில் நின்றிருந்த இளைஞரை காரில் வந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல் கை, கால், தலை என சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்த இளைஞர் அவ்வழியே வந்த பேருந்தில் ஏறியுள்ளார்.
இதன் காரணமாக அந்த கும்பல் பேருந்தில் ஏறி கண்ணாடிகளை உடைத்ததோடு அந்த இளைஞரை சரமாரியாக வெட்டியது. இதன் காரணமாக பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் மயக்க மடைந்தார்.
அதை கண்ட கும்பல் அங்கிருந்து கிளம்பியது. இதனைத் தொடர்ந்து பேருந்திலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த இளைஞர், தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த சதீஷ்குமார் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளைத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும் இரண்டு மாதங்களாக அவர் செய்யாறில் தங்கியிருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. சதீஷ்குமாரின் தந்தை அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரது குடும்பத்துக்கும், பங்காளி குடும்பத்துக்கும் சொத்து தகராறு இருப்பதாக கூறியுள்ளார்.
இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.