பெரியப்பாவை கட்டையால் அடித்து கொன்ற சிறுவன்.! பகீர் காரணம்.!  - Seithipunal
Seithipunal


சேலத்தில் தன்னுடைய பெற்றோரை அவதூறாக பேசியதாக பெரியப்பாவை கட்டையால் அடித்து கொலை செய்த வழக்கில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ரெட்டிபட்டி அருகே கட்டிட பணி செய்து வரும் சரவணன் மற்றும் அவரது தம்பி முருகேசன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு சரவணனுக்கும் அவரது தம்பி மகனான முருகேசனின் மகனுக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கின்றது.

அப்போது முருகேசன் மற்றும் அவருடைய மனைவியை அண்ணனான சரவணன் மதுபோதையில் மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருக்கின்றார். இதன் காரணமாக முருகேசனின் 15 வயது மகன் ஆத்திரம் அடைந்துள்ளார்.

எனவே அருகிலிருந்த உருட்டு கட்டையை எடுத்து சரவணன் தலையில் அடித்துள்ளார். இதன் காரணமாக சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சூரமங்கலம் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலையாளியான சரவணனின் தம்பி மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in salem reddypatti


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->