நாடக காதலை ஏற்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய கொடூரன்..! பெரம்பலூரில் பெரும் சோகம்..!!
murder in perambalur for one side love
தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கூன் கிராம பகுதியை சார்ந்தவர் செல்வராஜ். இவரது மகளின் பெயர் மகாலட்சுமி (வயது 19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், இவர்களுக்கு சொந்த வீடு ஒன்றை இவரின் பெற்றோர் கட்டிக் கொண்டு வருகின்றனர்.
இந்த கட்டிடத்திற்கு வீட்டு வேலைக்காக வெல்டிங் வைக்க வந்தவன், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த நாடக காதலன் சுதாகர் (வயது 25). இவன் வீட்டு வேலைக்காக மகாலட்சுமியின் இல்லத்திற்கு வந்த நிலையில், மகாலட்சுமியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளான்.
மேலும் தனது காதலை கூறி தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து மாணவியை வற்புறுத்தி வந்த நிலையில், அடிக்கடி நாடக காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மகாலட்சுமி, இந்த விஷயம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, கடந்த மாதத்தின் போது பெரம்பலூரில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர், புகாரை மற்றும் வாங்கி வைத்துவிட்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்த சமயத்தில், நேற்று மகாலட்சுமி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த கொடூரன் சுதாகர் வீட்டிற்கு உள்ளே வந்து தன்னை காதலிக்குமாறு மகாலட்சுமி வற்புறுத்தி நிலையில், தனது காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளான்.
இதனால் படுகாயமடைந்த மகாலட்சுமி வலியால் அலறி துடித்த நிலையில், இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்ததை கண்ட சுதாகர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளான்.
இதனையடுத்து இவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இ்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர், இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுதாகரை தேடி வருகின்றனர்..
நாடகக்காதலால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருவது தற்போது தொடர்கதையாகி உள்ளது. இதனை தவிர்க்க அரசு முறையான சட்டம் இயற்ற வேண்டும் என்று மக்கள் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
English Summary
murder in perambalur for one side love