ஆடிவெள்ளி.,கோவிலுக்கு போன பக்தர்கள் கண்ட கோரக்காட்சி.! அலறியடித்து ஓட்டம்.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாநகரில் உள்ள கோவில் திருவிழாவில் பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம், பக்தர்கள் மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அதிர்ச்சிக்கியுள்ளது. 

நேற்று ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு, மதுரை வைகை ஆற்றின் மைய மண்டபத்தின் அருகே உள்ள ஒரு கோயிலில் நடைபெற்று உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அப்பொழுது திருவிழாவில் கரும்பாலை பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கலந்து கொண்டுள்ளார். அவரை 7 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென தாக்கியுள்ளது. தப்பியோட முயன்ற ராஜசேகரை பக்தர்களின் கூட்டத்தை வைத்து நடுவிலேயே வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விரட்டியுள்ளனர். இதனால் தப்பி ஓட முயன்றுள்ளார்.

அவரை ஓட ஓட விரட்டி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர் இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்தவர் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை பார்த்துக் கொண்டிருந்த பக்தர்கள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினார். பின்னர் இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.

ராஜசேகரின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் 7 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் மீது முன்னதாகவே கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. எனவே, முன்விரோதம் காரணமாக அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம். என சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->