திருமணத்தை மீறிய உறவு... படுக்கையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த அவலம்.!
murder in madurai district for illegal relationship
தமிழகத்தின், மதுரை மாவட்டம் அனுப்பானடியை சேர்ந்தவர் சந்திரசேகர், அவரது மகன் ரமேஷ். ரமேஷ் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகிய நிலையில், மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, அதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து, ரமேஷ் அந்த பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்தார்கள், இருவரும் திருமணத்தை தாண்டிய தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் அந்தப் பெண்ணின் அண்ணன் ரமேஷிடம், தனது சகோதரியை விட்டு விலகுமாறு பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் ரமேஷ் இதனைப் பொருட்படுத்தாமல் செல்வத்தின் தங்கையோடு அடிக்கடி நெருக்கமாக பழகி வந்திருக்கிறார்.
இதன் காரணமாக கடும் கோபத்திற்கு ஆளான செல்வம், நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் ரமேஷ் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரமேஷை, செல்வம் நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பித்து சென்றார்கள்.
இதனால் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகிறார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
English Summary
murder in madurai district for illegal relationship