ரத்தம் சொட்ட, சொட்ட நடு இரவில் நடந்த பகீர் சம்பவம்.!! நேரில் கண்ட பெற்றோர் கதறல்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேட்டு நீரேத்தான் காலனியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சுரேஷ் என்பவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு முடி வெட்டுவதற்காக வெளியே சென்றுள்ளார்.

அப்போது பெரிய ஆறு கால்வாய் பகுதியில் நடந்து கொண்டு வந்த பொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்ததுபின்னர் அவரை சரமாரியாக தாக்கி வெட்ட முயன்றனர். சுரேஷ் தப்பியோட, மீண்டும் அவரை விரட்டி சரமாரியாக வெட்டியது. அவர் உயிரிழந்த நிலையில் அங்கிருந்து அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

பின்னர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சுரேஷின் உடலை பார்த்து கதறி, கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதன் பின்னர்தான் தெரிந்தது சுரேஷுக்கும் அதே பகுதியில் இருக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால்தான் இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->