துடிக்க, துடிக்க ரத்த வெள்ளத்தில் மிதந்த மாமனார்.! நடுரோட்டில் கத்தியால் குத்திய மருமகன்.!
murder in madurai
மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூர் அருகே அலங்கம்பட்டியைச் சேர்ந்த தங்கையா என்பவருக்கு தனலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். தனலட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த நல்லமணி என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக இன்று காலை தங்கையா மேலூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருக்கையில், அவருடைய மருமகன் நல்லமணி கடுமையான மதுபோதையில் வந்து அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த தங்கையா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்ல மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.