கண்ணிமைக்கும் நேரத்தில் பரபரப்பு சம்பவம்.! மதுரை அருகே கொடூரம்.!
murder in madurai
வழக்கு ஒன்றில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஆறுமுகம் புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் புதூர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஆறுமுகத்தை பின் தொடர்ந்து வந்த 5 நபர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
அதன் பிறகு கொலையாளிகள் அங்கு நின்ற வேனில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது 4 பேர் வேனில் ஏறிவிட்ட நிலையில் ஒருவர் கால்தவறி கீழே விழுந்துள்ளார்.
அவரை அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணை ஆய்வாளர் மடக்கி பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.