திருச்சி || அக்காவை கொலை செய்ய முயன்ற தம்பிக்கு வலைவீச்சு..!
Murder Attempt Near Trichy
அக்காவையும் அவரது மகனையும் வெட்டிய இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், வாழவந்தான் கோட்டை, பெரியார் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி. கணவனை பிரிந்து வாழும் இவர் தனது மகனுடன் தனியே தாய் வீட்டில் தனியே வசித்து வருகிறார். அவரது தம்பி மாடியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனக்கோடி குடும்பதகராற்றில் காரணமாகதனலெட்சுமி மற்றும் அவரது ஒரு வயது மகன் சாய்தேவ் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டர.
அவர்களின் அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கதினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள தனக்கோடியை தேடி வருகின்றனர்.
English Summary
Murder Attempt Near Trichy