மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மீன் வியாபாரி உயிரிழப்பு.!
Motorcycle van accident in Thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் காதர்மைதீன்(60). இவர் கட்டுமாவடி மொத்த மீன் விற்பனை மையத்திற்கு தினசரி அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்று மீன் வாங்கிச் சில்லரை வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் சென்று மீன் வாங்கிக் கொண்டு வந்த காதர் மைதீன் அம்மணிசத்திரம் காட்டாற்றுப் பாலம் அருகே வந்த போது, எதிரே வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காதர் மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த காதர் மைதீனின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காதர் மைதீன் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Motorcycle van accident in Thanjavur