மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதியதில் இளைஞர் பலி
Motorcycle van accident in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டி நாய்க்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் மூர்த்தி (21). அதே பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் என்பவரது அரிகிருஷ்ணன்(19). இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை பகுதியில் இருந்து தொட்டி நாயக்கனல்லி பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக பால் ஏற்றிக்கொண்டு வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
மேலும் அரிகிருஷ்ணன் கால் உடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Motorcycle van accident in kirishnagiri