திருவள்ளூர் || மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதி விபத்து - வாலிபர் பலி - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ஓட்டுநர் சிவபதி (34). இவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அப்பொழுது திருவள்ளூர் அடுத்த கோவிந்தமேடு பஞ்சாயத்து அலுவலகம் எதிரே சென்றபோது, அவ்வழியாக எதிரே வேகமாக வந்த மினிவேன் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த, போலீசார் உயிரிழந்த சிவபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய மினி வேன் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Motorcycle minivan accident in tiruvallur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->