மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேலரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (31). இவர் அரக்கோணம் அருகே தக்கோலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜேஷ், செய்யாறு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆர்காடு சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக வேகத்தடையில் நிலைதடுமாறி ராஜேஷ் கீழே விழுந்துள்ளார். அப்போது எதிரே வந்த லாரி ராஜேஷ் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த ராஜேஷ் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Motorcycle lorry accident in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->