#திருப்பத்தூர் || மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 2 சிறுவர்கள் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஜோலார்பேட்டை அருகே சின்ன பொன்னேரி பகுதியை சேர்ந்த சரவணன்(16) மற்றும் லோகேஷ்(17) ஆகிய இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது திருப்பத்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Motorcycle govt bus accident in Thirupattur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->