மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி விபத்து - தொழிலாளி பலி - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி மணிமாறன் (45). இவர் ராமநாதபுரத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டுடிருந்தார்.

அப்பொழுது மீசல் அருகே வந்தபோது பரமக்குடியில் இருந்து வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மணிமாறன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மணிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Motorcycle govt bus accident in ramanathapuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->