மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - வாலிபர் பலி
Motorcycle bus accident in virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(37). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேரி ஷகிலா.
இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து ஆனந்தராஜ் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக ஆனந்தராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆனந்தராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் போலீசார், வழக்கு பதிவு செய்து ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Motorcycle bus accident in virudhunagar